tamilnadu

img

144 தடை உத்தரவினால் வெறிச்சோடிய பொள்ளாச்சி நகரம்

பொள்ளாச்சி, மார்ச் 25-  கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தமிழகம் முழுவதும் செவ்வாயன்று மாலை முதல் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள் ளது. இதனால், பொள்ளாச்சி நகரம் மக்கள் நடமாட் டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனோ பாதிப்பினை கட்டுபடுத்தும் வித மாக, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அர சுப் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்பட வில்லை. இதன் காரணமாக பொள்ளாச்சி முக்கிய பகுதிகளான கடைவீதி , கோவில் வீதி, பேருந்து நிலையம் என அனைத்து பகுதிகளிலும்  100 சதவிகி தம் கடைகள் மூடப்பட்டது. அதேநேரம், மருந்தகங் கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக் குரிய மளிகைக் கடைகள் மட்டுமே திறந்திருந்தன.