tamilnadu

img

நாமக்கல் கவிஞரின் 131ஆவது பிறந்த நாள் விழா

நாமக்கல், அக்.19- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 131ஆவது பிறந்த நாள்  விழாவையொட்டி சனியன்று மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கவிஞரின்  உரு வப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 131ஆவது பிறந்த நாள்  விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் நாமக்கல் சேந்தமங்க லம் சாலை, கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள கவி ஞர் நினைவு இல்லத்தில் சனியன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், காவல் கண் காணிப்பாளர் அர.அருளரசு, நாமக் கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி. சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கவிஞரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இவ்விழாவில் நாமக் கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை யின் மூத்த மருமகள் அலமேலு அமர் தலிங்கம், பேத்தி விஜயலட்சுமி பார்த்த சாரதி, பேரன்கள் பழனியப்பன், ஹ.பாண்டியன் மற்றும் கொள்ளு பேரன் பத்மநாமன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  இவ்விழாவில் நாமக்கல் சார் ஆட்சி யர் (பொ) செ.பால்பிரின்ஸ்லி ராஜ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் சி.சீனிவாசன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் வெங்க டேசன், சிவக்குமார், நாமக்கல் நக ராட்சி ஆணையர் சுதா, நாமக்கல் வட் டாட்சியர் பச்சைமுத்து, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள்  கி.மோகன்ராஜ்  (செய்தி), சீ.கோகுல் (விளம்பரம்), நாமக்கல் கவிஞர் சிந்தனைப்பேரவைத் தலைவர் முனைவர் டி.எம்.மோகன், நூலக வாசகர் வட்டத்தை சேர்ந்த அன்பு செல்வன், அமல்ராஜ் உள்ளிட்ட திர ளான பொதுமக்கள் கலந்துகொண்ட னர்.