கொழும்பு,நவ.17- இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 52 சதவீத வாக்குகளை பெற்று பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவரை எதிர்த்து ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள் ளார். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வின் பதவிக்காலம் வருகிற ஜனவரி 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி இலங்கையில் ஜனாதி பதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 16 சனிக்கிழமையன்று நடை பெற்றது. இதில் 81.52 சதவீத வாக்கு கள் பதிவாகின. வாக்குகள் எண்ணும் பணி சனிக்கிழமையன்று இரவே தொடங்கியது.
50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்று விட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த வகையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 52 சதவீத வாக்குகளை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஆகிறார். 42 சத வீத வாக்குகளை பெற்றுள்ள சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
மோடி வாழ்த்து
வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது டிவிட்டரில், தங்களுடன் இணைந்து பணியாற்று வதன் மூலம் இருநாடுகளுக்கு இடையே, நெருக்கமான, சகோத ரத்துவ உறவுகளை மேலும் ஆழமான தாக மாற்ற முடியும் என்றும் நமது பிராந்தியத்தில், அமைதி, நல்லிக்க ணக்கம், மற்றும் பாதுகாப்பை உறுதிப் படுத்த முடியும் என்பதை தாம் எதிர் நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.