வாஷிங்டன், மே 6- அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி கமலேந்திர சிங், கொரோனா நோய் சிகிச்சைக்கு நான்கு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். மிசோரி பல்கலைக் கழக பேராசிரியரான அவர், தமது குழுவின ருடன் இணைந்து நான்கு மருந்துகளின் செயல்பாடுகளை கணினி மூலம் பரிசோதித்து, ஆய்வறிக்கையை, ‘பேத்தோஜென்ஸ்’ என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘ரெம்டெசிவிர், 6-ப்ளேரோரசில், ரிபாவிரின், பேவிபிரவிர் ஆகிய நான்கு மருந்துகளை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.இந்த மருந்துகள், கொரோனா வைரஸ் மரபணுக்களை, பல மடங்காக பெருக்க உதவுகிற புரதத்தின் வளர்ச்சியை தடுத்து, அழிக்க உதவுகின்றன. மரபணுக்களை மலடாக்க, இந்த மருந்துகள் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதர வைரஸ் போலவே, கொரோனா வைரஸ் பாதிப்பையும் நோய்த் தடுப்பு மருந்துகள் மூலம் தடுக்கலாம். இந்த மருந்துகளை பரிசோதனைக் கூடத்தில் மேலும் ஆய்வுக்குட்படுத்தி, முடிவுகளை உறுதிப்படுத்திய பின், சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிகிச்சைகள் வைரஸின் ஆர்.என்.ஏ பாலிமரேஸுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு ஆய்வக த்திலும், நோயாளிகளிடத்திலும் சோதனை நடத்த வேண்டியுள்ளது. என்று தெரிவித்துள்ளார். கமலேந்திர சிங் பரிந்துரைத்த நான்கு மருந்துகளில், ‘ரெம்டெசிவிர்’ மருந்தை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க மருந்து ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகாரமளித்துள்ளது.