tamilnadu

img

படுவேகமாக சரிந்து வரும் ‘மோடி மேஜிக்’ என்ற மோசடி!

கொல்கத்தா:
‘மோடி மேஜிக்’ என்று பரப்பப்பட்டு வந்த மோசடி பிரச்சாரம், படுவேகமாக சரிந்து வருகிறது’ என்றும், மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் அதையே வெளிப்படுத்துவதாகவும் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.2 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியை புத்துயிர்ப்புப்பெறச் செய்ய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.“மோடி மேஜிக் வெகுவேகமாக மறைந்து வருகிறது என்பதையே, ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் காட்டுகின் றன. மேலும், அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு, பொருளாதார சரிவுகளுக்கு எதிரான வெறுப்பே தேர்தல் முடிவுகளில் பிரதி பலித்துள்ளது.ஹரியானாவில் எங்கள் கட்சியின் போராட்டக் குணம்நாடு முழுதும் காங்கிரசை புத்துயிர் பெறச் செய்ய எங்களுக்கு உத்வேகம் ஊட்டியுள்ளது.ஹரியானாவில் ஆட்சியமைக்க பாஜக இப்போதுகுதிரைப் பேரத்தை ஆரம்பிக்கும். மக்கள் தீர்ப்பை பாஜக மதிக்கிறதா,எதிர்த்துச் செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டி யுள்ளது. தங்கள் ஆட்சியை அமைக்க எந்த ஒரு நியாயமற்ற முறையையும் கடைபிடித்து தங்கள் கைகளை அழுக்காக்கிக் கொள்வார்களா? என்பதைப் பார்க்க வேண்டும்.”இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

;