tamilnadu

img

‘எதற்காக இப்படி செய்தீர்கள்; எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட தந்தை இல்லாமல் செய்து விட்டீர்களே!’

வாப்பாவின் வருகைக்காக அவள்உப்பாவின் கைளில் பகல் பொழுது முழுவதும் இருந்தாள். அழவில்லை. பிடிவாதம் இல்லை. சற்று நேரம்தோளில் சாய்ந்து உறங்கவும் செய்தாள். சத்தமிட்டு சிரிக்கவோ, தகராறு செய்யவோ இல்லை. ஹக் முகம்மதுவின் ஒரு வயதுமகள் ஹைரா இப்போதுதான் பாதம் பதித்துநடக்கப் பழகுகிறாள். வாழ்க்கையில் கைபிடித்துநடக்க அவளுக்கு இனி வாப்பா இல்லை.கேரளத்தில் திருவனந்தபுரம் வெங்ஞாரமூடு பகுதியில் திருவோணத்தன்று காங்கிரஸ் கட்சியினரின் கொலைக்கத்தி இரண்டு குடும்பங்களில் 3 குழந்தைகளின் வாப்பாக்களை பறித்துள்ளது. வயிற்றில் வளரும் ஒரு சிசு பிறப்பதும் வாப்பா இல்லாதவலியை அனுபவிக்கத் தான். ஹக்கின் மனைவி நஜீலா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். “எல்லோரிடமும் அன்பை மட்டுமே காட்டிய எனது இக்காயை எதற்காக இப்படி செய்தீர்கள். எனது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் கூட வாப்பா இல்லாமல் செய்து விட்டீர்களே” உள்ளம் உருகும்நஜீமாவின் இந்த கேள்வி ரத்தம் புரண்ட வாள் ஏந்தியவர்களை நோக்கி.

வாப்பா கொண்டு வரும் ஓணப்பரிசுக்காக காத்திருந்தனர் இப்சானும் இர்பானும்.அவர்கள் முன்னால் வந்ததோ ஏராளம் கனவுகளை தேக்கி வைத்திருந்த இதயத்தில் விழுந்த குத்தில் உயிரற்றுப் போனமிதிலாஜின் சடலம். வெள்ளைத் துணிக்கட்டினுள் உறங்கும் வாப்பாவின் முகத்தைப் பார்க்க சகிக்காமல் 7 வயது இப்சான் தேம்பிஅழுதான். ஒன்றும் புரியாமல் நடுங்கினான் 5 வயதுள்ள இர்பான். வாப்பா இனிஇல்லை என உணர்ந்த நிமிடம் அழத்தொடங்கினான். தந்தையின் அரவணைப்புக்காக ஏங்கும் அந்த குழந்தைகளை யாரெல்லாமோ அணைத்துக் கொண்டனர். சுற்றிலும் ஓராயிரம் அழுகுரல்கள், விசும்பல்கள். இனி ஒருபோதும் கண்விழிக்காத வாப்பாவின் முகத்தை பார்க்கஇயலாமல் சுற்றி நின்றவர்களின் முகங்களைப் பார்த்து வாய்விட்டு அழுதனர்.காதலித்த பெண்ணை 24 வயதில் நிக்காசெய்தவர் ஹக். குடும்பம் நடத்த பல்வேறு வேலைகளுக்கும் சென்றார். சிபிஎம் கிளைச் செயலாளர் சஜீரின் பிளம்பிங் கடையில் வேலை செய்தார். பின்னர் ஓட்டுநரானார். கோவிட் ஊரடங்கில்
நெருக்கடி ஏற்பட்ட போது மீனும் காய்கறியும் வியாபாரம் செய்தார். இதோடு தான்நம்பிய இயக்கத்தை உயிர்போல் ஏந்திக்்கொண்டார். 

ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் முன்னணியில் நிற்பார். காங்கிரஸ் கட்சியின் வலுவான மையமான அந்த பகுதியில் இளைஞர்களை அணிதிரட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயல்பாடுகளுக்கு வழிவகுத்தார். காங்கிரஸ் கட்சியினரின் ஆதிக்கத்தில் இருந்த தேம்பாமூடு வார்டில் கடந்த தேர்தலில் முதல்முறையாக சிபிஎம்வெற்றி பெற்றது. தொடர்ந்து அந்த பகுதியின் வளர்ச்சிக்காக முன்னின்று செயல்பட்ட டிஒய்எப்ஐ கிளை தலைவர்தான் ஹபக்.  பல்வேறு பணிகள் செய்து குடும்பம் நடத்தி வந்த மிதிலாஜ், டிஒய்எப்ஐ செயல்பாடுகள் மூலம் மக்களிடம் நெருக்கமாக பழகி வந்தார்.