பினராயி, டிச.22- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் வலுவாக நடந்து வருகிறது. கேரளத்திலும் ஒவ் வொரு தெருக்களிலும் போராட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. திருமண மேடையும் அதற்கு விதிவிலக்கல்ல என நிரூபித்துள்ளனர் நவீன தம்பதியர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தர்மடம் பகுதிக் குழுவின் பொருளாளர் ஏ.ஷிபுவுக்கும், கொளச்சேரி பகுதிக்குழு உறுப்பினர் ஹர்ஷா வுக்கும் ஞாயிறன்று திருமணம் நடந்தது. அவர்கள் தங்களது மணமேடையை பிரிவினைக்கு எதிரான செய்தியாக மாற்றினர். என்ஆர்சிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிரான வாசகங்கள் கொண்ட அட்டைகளை அவர்கள் தங்க ளது கைகளில் ஏந்தினர் மணக்கோலத்தில்.