திருவனந்தபுரம், அக்.28- வாளையாறில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிகள் வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது என கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் திங்களன்று (அக்.28) துவங்கியது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு எதிர்கட்சி உறுப்பினர் ஷாஜி பரம்பில் கொடுத்திருந்த அவசர தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர், அரசின் மீது ஆதாரமற்ற குற்றம்சாட்டை எதிர்கட்சி தலைவர் கூறுவதாக குறிப்பிட்டார். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தொடர் நட வடிக்கைகளுக்காக சிறந்த வழங்கறிஞரைக் கொண்டு மேல்முறையீடு உள்ளிட்ட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது தீவிர மாக கவனிக்க வேண்டியதாகும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமா அல்லது மறு விசாரணை நடத்த வேண்டுமா என்பதை பரிசீலிக்கலாம். வழக்கில் மனிதாபிமான முறையிலான அணுகுமுறை இருக்கும் எனவும் முதல்வர் தெளிவுபடுத்தினார்.