tamilnadu

img

பெரும் பிரளயத்தை எதிர்கொண்டு மீண்டெழுந்த கேரளம் நாட்டுக்கே முன்மாதிரி கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கர் புகழாரம்

ஆலப்புழா, செப்.1- உலகின் எந்த பகுதியில் படகுப் போட்டி (வள்ளம் களி) நடந்தாலும் முதலில் கண்முன் வருவது கேரளம் தான். பெருவெள்ளத்திலிருந்து மீண் டெழுந்த கேரளத்தின் ஒற்றுமை நாட்டுக்கே முன்மாதிரி என பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண் டுல்கர் புகழாரம் சூட்டினார்.  ஆலப்புழயில் சனியன்று நடந்த 67ஆவது நேரு கோப்பை வள்ளம்களி யில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற சச்சின் டெண்டுகர் மேலும் கூறியதாவது: இத்தனை பெரிய பிரளயம் ஏற்பட்ட போதிலும் வலுவாக அதை எதிர் கொண்டு மீண்டுவந்ததோடு இப்படி ஒரு தண்ணீர் விழா ஏற்பாடு செய்தி ருப்பது கேரள சமூகத்தின் ஒருமைப் பாட்டால் மட்டுமே சாத்தியமாகியுள் ளது. பிரளயத்திலிருந்து மீண்ட கேர ளத்தின் ஒற்றுமை நாட்டுக்கே முன் மாதிரியாகும். கேரளத்தின் விளை யாட்டு ஆர்வம் ஐஎஸ்எல் கால்பந்து மூலம் ஏற்கனவே அறிந்துகொள்ள முடிந்தது.  நூறு அடிவரை நீளமுள்ள வள் ளத்தில் சுமார் நூறு வீரர்கள் ஒற்றுமை யாக துடுப்பு போடுவது அற்புதக்காட்சி. வள்ளங்களில் பாலின சமத்துவம் கொண்டுவரப்பட வேண்டும். வள் ளங்களில் ஆண்களோடு பெண்களும் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கேற்கும் போட்டிகள் பரஸ்பர புரிதல், பகிர்தல் போன்ற வற்றை வளர்க்கும். நமது குடும்பங்க ளின் முதுகெலும்பு பெண்களே ஆவர். அவர்கள் உடல்நலத்துடன் திகழ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற் பது உதவும். நாம் சுயமாக பயிற்சி பெற்று போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும். விளையாட்டின் உண்மை யான உணர்வு நிலைநாட்டப்பட வேண் டும். கடினமாக பயிற்சி செய்யுங்கள் விளையாட்டில் ஏமாற்ற வேண்டாம். தோல்வி அடைந்தாலும் மீண்டும் போராடுக! கேரளத்துக்கு வருவது என்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. எல் லோரிடமும் ஏராளமான அன்பு செலுத்துகிறேன். அது இங்கிருந்தும் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்று டெண்டுல்கர் பேசினார்.  படகுப்போட்டியை கொடி அசை த்து டெண்டுல்கர் துவக்கி வைத்தார். அப்போது கைகள் இல்லாத ஆலத்தூ ரைச் சேர்ந்த பிரணவ் காலால் தீட்டிய தனது ஓவியத்தை என்றென்றும் பாது காத்து வைக்க உள்ளதாக அவர் கூறி னார். நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.