tamilnadu

img

அதானி குழுமத்திற்கு விமான நிலையங்களை  குத்தகைக்கு விடுவதற்கு எதிராக தீர்மானம்

கேரள சட்ட மன்றத்தில் அதானி குழுமத்திற்கு விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
நாட்டில் திருவனந்தபுரம் உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மோடி அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து அதானிக்கு கொடுக்கும் அதே விலைக்கு கேரளா விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள தயார் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட கூடாது என வலியுறுத்தி கேரளா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் மற்றும் வீடுகளில் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று கேரள விமான நிலையங்கள் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்ட மன்றத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்மானத்தை முன்மொழிந்தார்.  எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பாஜக எம்எல்ஏ ராஜகோபாலன் ஏற்கனவே  வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.