tamilnadu

img

கனமழை காரணமாக கேரளாவில் ஆரஞ்சு அலர்ட் - இந்திய வானிலை மையம்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இரு தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டல பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இரு தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையின் எதிரொலியால் கொச்சியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

;