திருவனந்தபுரம், ஏப்.25- கேரளத்தில் எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் தவறா னவை என உயர்நீதி்மன்ற உத்தரவு தெளிவுபடுத்தி உள்ள தாகவும், ஸ்ப்ரிங்லர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா குறித்த தகவல் சேகரிக்கும் பணி தொடரும் எனவும் கேரள முதல்வர் தெரி வித்தார்.
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண் காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் அது பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் ஏற் பட்டது. குறுகிய கால அவகாசத்தில் அது குறித்த விவரங்களை சேகரித்து ஆய்வு செய்யும் ஏற்பாடு இல்லாத நிலையில் கேரளியரால் அமெரிக் காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ப்ரிங்லர் என்னும் நிறுவனம் உதவ முன் வந்தது. ஆறு மாதங்களுக்கு கட்டண மில்லாமலே இந்த சேவையை அளிக்கத் தொடங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையால் மேற் கொள்ளப்பட்ட இந்த முடிவுக்கு எதிராக ஊழல்- முறைகேடு என காங்கிரஸ் தலைவர்களும் சில ஊடகங்களும் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. ஸ்ப்ரிங்லர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தகவல் பரிமாற்றத்தை தடை செய்ய வும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதி மன்றம் வெள்ளியன்று தடை விதிக்க மறுத்துவி்ட்டது.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் செய்தியா ளர்கள் சந்திப்பின்போது இது குறித்து எழுந்த கேள்விக்கு பதில ளித்து அவர் கூறியதாவது: உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு களும், மறுப்புகளும் தவறானவை என்பதை தெரிவிப்பதாகும். வழக்கில் எதிர்கட்சி முன்வைத்த முக்கிய தேவைகள் எதையும் நீதிமன்றம் ஏற்க வில்லை. இப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவே நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு அவ்வாறே முன்னெடுக்கும். தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதில் எவ்வித சமரசமும் இல்லை. தகவல் பாதுகாப்பு குறித்து அரசுக்கு ஏற்கனவே தெளிவான நிலைப்பாடு உள்ளது. அதை வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது. தகவல் பாதுகாப்புக்கு இந்த அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது என்றார்.
பாதிப்பு 3, விடுவிப்பு 15
கேரளத்தில் வெள்ளியன்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி யானது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு நெருக்கத்தின் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 15 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். மலப்புறத்தில் நான்கு மாத குழந்தை உயிரிழந்தது மிகவும் துயரமானது. இதுவரை மாநிலத்தில் 450 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் 116 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கண்காணிப்பில் 21,725 நபர்கள் உள்ளனர். இதில் வீடுகளில் 21,241 பேர், மருத்துவமனையில் 452 பேர் உள்ளனர். வெள்ளியன்று மட்டும் 114 பேர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 21,941 மாதிரிகள் பரிசோ தனை செய்யப்பட்டன. 21,830 நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவுக்கு எதிராக குடும்பஸ்ரீ உறுப்பினர்களும் தபால் துறையினரும் சிறப்பான சேவை செய்து வருகின்றனர். ‘சகாயஹஸ்தா’ திட்டத்தின்படி ரூ. 2000 கோடி கடன் குடும்பஸ்ரீ மூலம் அமல்படுத்தப்படும். 32 லட்சம் குடும்பங்களுக்கு இந்த கடன் கிடைக்கும். 75 சதவிகிதம் சமுதாக சமையலறைகளை குடும்பஸ்ரீ நடத்து கிறது. இதில் சிலர் மக்கள் உணவ கங்களை துவக்கியுள்ளனர். 22 லட்சம் முக கவசங்களும் சானிட்டை சர்களும் இவர்கள் தயாரித்து அளித் துள்ளனர். நடமாடும் தபால் நிலை யங்கள் சமூகநல ஓய்வூதியங்களை 48 லட்சம் பேருக்கு வீடுகளில் ஒப்ப டைத்துள்ளன. கொரோனா தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆதரவாக சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான இ-போஸ்ட் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
307 ஏக்கரில் காய்கறி பழம்
தொழில்துறையின் கீழ் 307 ஏக்கர் நிலத்தில் காய்கறி, பழ விவசாயம் செய்யப்படும். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான மருத்துவக் கருவி களை ரோட்டரி கிளப் வழங்கியது. பிஎஸ்என்எல் அதிகாரிகள் அமைப்பு பல்வேறு மருத்துவக் கல்லூரி களுக்கு பிபிஇ பைகள் வாங்க ரூ.8 லட்சம் வழங்கினர். தமிழ் திரைப்பட நடிகர் விஜய் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார் என முதல்வர் கூறினார்.