கேரளாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றுகள்
கேரளாவில் இன்று ஒரே நாளில் 7006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 3,199 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 1 லட்சத்து 14 ஆயிரத்து 530 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா தொற்றால் 1 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று 1,050 பேருக்கு தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது.