tamilnadu

img

யுடிஎப் ஆட்சியில் ரூ.5 கோடி நஷ்டத்தில் கேஎஸ்டிபி எல்டிஎப் ஆட்சியில் ரூ.7.13 கோடி லாபம் ஈட்டி சாதனை

திருவனந்தபுரம்,  மே 27-  மருந்து உற்பத்தி செய்யும் கேரளத்தின் ஒரே  ஒரு பொதுத்துறை நிறுவன மான கேஎஸ்டிபி, கடந்த யுடிஎப் ஆட்சியில் ஏற்பட்ட ரூ.4.98 கோடி நஷ்டத்தை ஈடு கட்டி ரூ.7.13 கோடி லாபத்து டன் பீடுநடைபோட வைத்துள் ளது எல்டிஎப் அரசு. கேரள மாநிலம் ஆலப் புழா மாவட்டம் கலவூரில் கேரள அரசுக்கு சொந்த மான கேஎஸ்டிபி (Kerala State Drugs & Pharmaceut icalas Ltd) நிறுவனம் உள்ளது. 1974 இல் துவக்கப் பட்ட இந்த நிறுவனம் பல்வேறு வகை மருந்து களை தரமாக தயாரித்து வரு கிறது. தனியார்மயம் தாரா ளமய கொள்கைகளை கடை பிடித்த உம்மன்சாண்டி தலைமையிலான யுடிஎப் அரசு பல நிறுவனங்களை கைகழுவும் நோக்கத்துடன் நலிவடையும் நிலைக்கு கொண்டு சென்றது.

அந்த அரசின் இறுதி ஆண்டான 2015-15இல் கேஎஸ்டிபி ரூ.4.98 கோடி நஷ்டத்தில் நலிவடைந்த நிலைக்கு சென் றது. அதற்கு எதிராக தொழி லாளர்களும் சிஐடியு போன்ற தொழிற்சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர் போரா ட்டங்கள் நடத்தினர். அத்தகைய மக்கள் போராட்டங்களின் விளை வாக 2016இல் அமைந்த இடது ஜனநாயக முன்னணி அரசின் கொள்கையாக  பொதுத்துறை பாதுகாப்பை பிரகடனம் செய்தது. அதன்படி தொழில்துறை மேற்கொண்ட வளர்ச்சி நட வடிக்கைகள் கேஎஸ்டிபி நிறு வனத்தை உலக தரம் மிக்க  மருந்து நிறுவனமாக உயர் த்தியுள்ளது. 2 ஆண்டுக ளுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் பெட்டா லாக்டம் ஊசிமருந்து தயா ரிப்புக்கான ஒரு புதிய பிரிவு துவக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ரூ.32.15 கோடி செலவில் நாண் பெட்டா லாக்டம் ஊசி மருந்து தயா ரிப்புக்கான ஒரு பிரிவையும் நிறுவியது. குறைந்த விலை யில் தடுப்பூசி மருந்துகள் கிடைக்க எல்விபி, எஸ்விபி,  கண் மருந்து தயாரிப்புக்கான உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் கேஎஸ்டிபி ரூ.66.25 கோடி மதிப்பிலான மருந்துகளை உற்பத்தி செய்து ரூ.53.76 கோடிக்கு விற்றுவரவு (turn over) செய்துள்ளது. கடந்த ஆண்டு லாபம் ரூ.2.75 ஆக இருந்தது. 2019-2020இல் இது மூன்று மடங்கு அதிக ரித்துள்ளது. இப்போது நுண்ணுயிர்கொல்லி (Anti biotic) மருந்துகளும், ஊசி  மருந்துகளும் தயாரிக்கப்ப டுகிறது. புற்றுநோய்க்கான மருந்து உற்பத்தியும், அதன் ஏற்றுமதியும் விரையில் துவங்க உள்ளது.

நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி

►நாண் பெட்டா லாக்டம் மருந்து தயா ரிப்புக்கு உலக சுகாதார அமைப்பதின் அங்கீகாரம்.

►நிறுவனத்தின் ஆய்வகத்திற்கு என்ஏபிஎல்-.இன் தேசிய அங்கீகாரம்

►ஆறு வகையான மருந்துகள் ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது.

►கோவிட் தடுப் புக்காக 7 லட்சம் லிட்டர் சானிட்டைசர் தயாரித்தது. கோவிட் சிகிச்சைக்கு தேவையான பல்வேறு மருந்துகளின் உற்பத்தி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

►ஹைட்ரோக்சி க்ளோரோபின் சல்பேட் மாத்திரைகள் உற்பத்தி உடனடியாக துவக்கப்படும்.

►ஸ்ரீசித்ரா மருத் துவ அறிவியல் நிறுவனத்து டன் இணைந்து சுகாதாரத்து றைக்கு தேவையான கரு விகள் உற்பத்தி.

►உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொ ண்டவர்களுக்கான மருந்து கள் தயாரிப்புக்கான புற்றுநோ யியல் பூங்காவை நிறுவு வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.