கேரள பொதுச் சேவை ஆணையத்தின் (பி.எஸ்.சி) அரசு பதவிகளுக்கான தேர்வு செயல்முறையில் ஒரு பெரிய மாற்றத்தை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன் சோதனை உட்பட இரண்டு கட்ட சோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. செவ்வாயன்று இந்த முடிகளை அறிவித்த பி.எஸ்.சி தலைவர் எம்.கே.சக்கீர், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (யு.பி.எஸ்.சி) மாதிரியைப் பின்பற்றும் புதிய முறை இந்த ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பி.எஸ்.சி தேர்வுகள் அனைத்தும், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் மாதம் நடைபெறும். முதல் ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 12 அன்று இருக்கும் என அவர் கூறினார்.
கேரள நிர்வாக சேவைக்கு (கேஏஎஸ்) நடத்தப்பட்ட முதற்கட்ட தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்படும். இதில் ஸ்ட்ரீம் 1 க்கு 3.27 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள், அதில் 3000-4000 பேர் அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அவர் கூறினார். ஸ்ட்ரீம் 2 இல் 22,000 மாணவர்கள் இருக்கிறார்கள் எனவும் , அவர்களில் 2000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவும் அவர் கூறினார்.