tamilnadu

img

கேரளா: யானை உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது 

கேரளாவில் யானை உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடிபொருள் வைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வெடிபொருள் யானையின் வாயில் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தது.  வாயில் ஏற்பட்ட காயத்தால் ஆற்றிலேயே நின்று கொண்டிருந்த யானை கும்பி உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல் நலக்குறைவால் கடந்த 27ம் தேதி உயிரிழந்தது. கொடூரமான இந்த நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. 

இந்நிலையில் யானை உயிரிழப்பில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி மருந்தால் தான் யானை உயிரிழந்தது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில்  தொடர்புடைய 50 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கேரள வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.