tamilnadu

img

உயர் நீதிமன்றம் ரீசனுக்கு அனுமதி

திருவனந்தபுரம்:
ஆனந்த் பட்வர்தன் இயக்கியுள்ள ‘ரீசன்’ ஆவணப் படத்தைத் திரையிட கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கேரள சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்பட விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆனந்த் பட்வர்தன் இயக்கியுள்ள ‘ரீசன்’ என்ற ஆவணப் படம், ஜூன் 24-ஆம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது.நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி,
கவுரி லங்கேஷ் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அறிஞர்களின் கொலைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு, மத்திய செய்தி ஒலிப்பரப்புதுறை அமைச்சகம் அனுமதி மறுத்திருந்தது.

இதை எதிர்த்து திரைப்படவிழா நிர்வாகம் தொடுத்த வழக்கில், ரீசன் ஆவணப்படத்தை கேரள சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்படவிழாவில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலாப நோக்கில்லாத திரைப்பட விழாக்கள், திரைப்பட மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள், இயக்குநர்கள், திரைப்பட தொழில் செய்வோருக்காக திரையிடப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் அவசியமில்லை என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;