குமரியில் ஆர்சிசி புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க முடிவு அமைச்சர் கே.கே.சைலஜா
திருவனந்தபுரம், ஏப்.25- கொரோனா பின்னணியில் கேரளத்தில் துவக்கப்பட்ட 22 புற்றுநோய் சிகிச்சை மையங் களுடன் கூடுதலாக கேரள முதல்வரின் உத்த ரவின்படி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட் டத்திலும் சிகிச்சை மையம் அமைத்து கேரளம் மற்றுமொரு முன்மாதிரியை படைத்துள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச் சர் கே.கே.சைலஜா செய்தியாளர்களிடம் கூறி யதாவது:
தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் திரு வனந்தபுரம் ஆர்.சி.சி.யின் தலைமையில் கன்னி யாகுமரி மாவட்ட மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் புற்றுநோயாளிகளுக்கு ஆறு தல் அளிக்கும். கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 560 பேர் ஆர்.சி.சி.யில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், ஊரடங்கு மற்றும் நோய் தொற்று காரணமாக இவர்களால் மாநில எல்லையைக் கடந்து வந்து சிகிச்சை பெற முடியவில்லை. இவர்களுக்கு தேவையான சிகிச்சையை உறு திப்படுத்தவே கேரள அரசு இந்த முடிவை மேற் கொண்டது. கேரள சுகாதாரத்துறை தமிழ்நாடு சுகாதாரத்துறையுடன் விவாதித்து இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
ஆர்.சி.சி.யில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாட்டு நோயாளிகளுக்கு இங்குள்ள மருத்துவர்கள் டெலி கான்பரன்ஸ் மூலம் சிகிச்சை விவரத்தை அங்குள்ள மருத்துவர் களுக்கு தெரிவிப்பார்கள். இந்த நோயாளி களுக்கான தொடர் பரிசோதனை, கீமோ தெரபி, நோய் தடுப்பு மற்றும் தொடர் சிகிச்சை கள் இந்த மையங்களிலேயே செய்துகொள்ள லாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த புற்றுநோயா ளிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று ஏற் பட்டால் மிக விரைவில் அவர்கள் ஆபத்தான நிலைக்கு சென்றுவிடுவார்கள். எனவேதான் அவர்கள் அதிக தூரம் பயணம் செய்வதை தவிர்க்க அருகில் உள்ள இடங்களில் புற்று நோய் சிகிச்சைக்கான வசதி ஏற்பாடு செய்யப் பட்டது. அதன்படி கேரளத்தில் திருவனந்தபுரம் பொது மருத்துவமனை, பல்வேறு மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஒற்றப்பாலம், புனலூர் தாலுகா மருத்துவமனைகள் என 22 மையங்களில் இந்த வசதி செய்யப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆர்.சி.சி.யின் வழிமுறைகளின்படி ஏராளமான நோயாளிகளுக்கு இந்த மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அமைச்சர் கூறினார்.