tamilnadu

காங்கிரஸ் - பாஜகவில் இருந்து ஏராளமான குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

வயநாடு, ஆக. 5- வயநாடு மாவட்டம் மானந்தவாடி தொகுதி செயலாளர் உள்ளிட்ட காங்கிரஸார் கூட்டமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  காங்கிரஸ் கட்சியின் மானந்தவாடி தொகுதி செயலாளர் எம்.ஆர்.சுரேந்திரன். நீண்டகாலமாக அப்பகுதி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகித்து வந்தார். கடந்த நகராட்சி தேர்தலில் ஜெஸி டிவிசனில் யுடிஎப் வேட்பா ளராக போட்டியிட்டார். இவரது மனைவி சுபத்ராவும் முன்னணி காங்கிரஸ் ஊழியரா வார். இவரும் பிலாக்காவு டிவிசனில் வேட்பாளராக போட்டியிட்டார். இவர்களுடன் மனந்தவாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் இயக்குநர் ராஜேஷ் பத்தாயபுரக்கல், தாமஸ் குரிசும்மூட்டில், இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களான ஜாபி வடக்கோத்தலக்கல், மனோஜ் கல்லோ லிக்கல் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி சிபிஎம் மில் இணைந்த னர். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ககாரி தலைமையில் இவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  

அடூரில் காங்கிரஸ் பாஜகவிலிருந்து..
இதுபோல் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து ஏராளமானோர் சிபிஎம்மில் இணைந்து வருகிறார்கள்.  திங்களன்று அடூர் ஏரத்து பஞ்சாயத்தில் உள்ள கிளிவயல் பகுதியில் காங்கிரஸ்- பாஜக ஊழியர்களான 14 குடும்பங்கள் அந்த கட்சிகளிலிருந்து விலகி சிபிஎம்மில் இணைந்து செயல்பட முடிவு செய்தன. அதன்படி மயூரம் கலையரங்கில நடந்த நிகழச்சியில் அவர்களை சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.உதயபானு வரவேற்றார்.