திருவனந்தபுரம், ஆக.19- கேரள பணியா ளர் தேர்வாணையம் இனிமேல் இரண்டு கட்ட தேர்வுகளை நடத்த முடிவு செய் துள்ளது. முதல் கட்டத்தில் ஸ்கிரீனிங் டெஸ்ட் நடத்தப்படும். இதில் தேர்ச்சி அடைவோர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுவார்கள் என்று பிஎஸ்சி தலைவர் எம்.கே.ஸக்கர் கூறினார். புதிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், வி்ண்ணப்பங்கள் அதிக அளவில் வரும் பணியிடங்களுக்கு புதிய நடைமுறை பொருந்தும் என்றார். முதல் முறையாக டிசம்பரில் புதிய முறையிலான தேர்வு கள் நடத்தப்படும். ஸ்கிரீனிங் டெஸ்ட்டில் பெறும் மதிப்பெண் தகுதிப் பட்டியலுக்கு உட்படாது. இறுதி தேர்வுக்கு தகுதி பெறுவதற்கு மட்டுமே ஸ்கிரீனிங் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் இறுதித் தேர்வு நடத்தி வேகத்தில் தகுதிப் பட்டியல் வெளியிட முடியும் எனவும் அவர் கூறினார். யுபிஎஸ்சி போன்ற அகில இந்திய தேர்வு முறையின் மாதிரியைப் பின்பற்றி இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ள தாகவும் பிஎஸ்சி தலைவர் தெரிவித்தார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் செப்டம்பர் முதல் நடைபெறும். விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பணியிடங்களுக்கான தேர்வுகள் டிசம்பர் முதல் தொடங்கும். ஏற்கனவே தரவரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட தேர்வர்களுக்கு உரிய நியமனங்கள் இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் பிஎஸ்சி மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.