tamilnadu

img

கேரளத்தில் ஆன்டிபாடி பரிசோதனை தொடங்கியது...

திருவனந்தபுரம்:
கோவிட் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக என்பதை கண்டறிவதற்கான ஆன்டிபாடி பரிசோதனை கேரளத்தில் திங்களன்று தொடங்கியது.சுகாதார ஊழியர்கள், காவல்துறை யினர், பொதுமக்களுடன் அதிக தொடர்புள்ள பொதுநல ஊழியர், அரசு ஊழியர், வெளிமாநில தொழிலாளர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் போன்ற அண்மைக் காலத்தில் பயணம் மேற்கொண்டவர்கள், வீடுகளிலும் அரசின் மூலமும் கண்காணிப்பில் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சை பெற்று வருவோர் போன்றோருக்கு ஆன்டிபாடி பரிசோதனை செய்யப்படுகிறது. 

அவரவர் வசிப்பிடங்களுக்கு சென்று இலவசமாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.பரிசோதனை வரம்புக்குள் வருகிறவர்கள் 5 பகுதிகளாக பிரிக்கப்படு வார்கள். ஐசிஎம்ஆர் அளித்துள்ள 14 கருவிகளில் 10 கருவிகள் மூலம் முதற்கட்ட பரிசோதனை நடத்தப்படு கிறது. நோய் தொற்று கண்டறியப்பட்ட வர்களின் எண்ணிக்கை மற்றும் வெளியிடங்களில் இருந்து திரும்பி வந்தவர்களை அடிப்படையாக கொண்டு பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புறம், திரிச்சூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் பரவலான பரிசோதனைநடத்தப்படும். இந்த மாவட்டங்களில் தலா1000 கருவிகள் பயன்படுத்தப்படும்.  கோவிட் நோயாளிகளை பராமரிப்போர்மற்றும் அதல்லாத மற்ற சுகாதார ஊழியர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படுவர்.  

15 நிமிடங்களில் முடிவு
விரல்நுனியில் இருந்து ரத்தம் எடுத்துநடத்தப்படும் ஆன்டிபாடி பரசோத னையில் 15 நிமிடங்களுக்குள் முடிவு தெரிந்து கொள்ளலாம். உடலில் ஏதேனும்வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதையும்இந்த பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம். நோய் தொற்று கண்டறியப்பட்டால் பிசிஆர் பரிசோதனை மூலம் வைரஸ் உறுதி செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில் 40,000 ஆன்டிபாடி பரிசோதனைக் கருவிகள் வழங்க உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அந்த கருவிகளும் கிடைத்து
விட்டால் பரிசோதனை மேலும் அதிகரிக்கப்பட உள்ளன.

;