tamilnadu

img

கேரளத்தில் புதிதாக 78 கோவிட் நோயாளிகள்...

திருவனந்தபுரம்:
 கேரளத்தில் வெள்ளியன்று புதிதாக 78 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 67 பேர் வெளியில் இருந்து கேரளத்துக்கு வந்தவர்கள். 10 பேருக்கு தொடர்புகள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 32 பேர் குணமடைந்தனர்.
புதிதாக நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 31 பேர் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். கண்ணூரில் வியாழனன்று கண்காணிப்பில் இருந்து உயிரிழந்த உஸ்மான் குட்டிக்கு (71) கோவிட்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஜுன் 9 ஆம் தேதிமும்பையில் இருந்து ரயில் மூலம்கேரளம் வந்தார். இதய நோயாளியான அவருக்கு ஆபத்தான மூச்சுக்கோளாறும் இருந்தது. இதோடு கேரளத்தில் கோவிட்டுக்கு உயிரிழந்தோர் 19 ஆக அதிகரித்துள்ளது.  

நோய் தொற்றுடன் சிகிச்சைபெற்று வந்தவர்களில் 32 பேர் வெள்ளியன்று குணமடைந்தனர். இதுவரை 999 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1303 பேர் சிகிச்சையில் உள்ளனர். விமானம் மூலம் 63,513 பேரும் கப்பல் மூலம் 1621 பேரும், சாலை வழியாக  1,34,120 பேரும் ரயில் மூலம் 25,525 பேர் உட்பட கேரளத்துக்கு மொத்தம் 2,24,779 பேர் வந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 2,27,402 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,25,417 பேர் வீடுகள்-நிறுவன கண்காணிப்பிலும் 1985 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். வெள்ளியன்று 242 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5001 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை1,06,850 நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு (தனியார் ஆய்வகங்கள் உட்பட) அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 3392 மாதிரிகளின் முடிவு நோய் தோற்று இல்லை என வந்தன.  மேலும், சுகாதார ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரின் 28,356 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 26,143 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. மறுமுறை ஆய்வு உட்பட மொத்தம் 1,40,457 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.வெள்ளியன்று மேலும் 9 தீவிரநோய் பரவல் பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டன. 14பகுதிகள் தீவிர நோய் பரவல்பட்டியலில் இருந்து விலக்கப்பட்டன. தற்போது கேரளம் முழுவதுமாக 128 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.

;