tamilnadu

img

கேரள உள்ளாட்சித் தேர்தல்கள்: : டிசம்பர் 10 க்குள் 2 கட்ட வாக்குப்பதிவு... அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும்....

திருவனந்தபுரம்:
கேரள உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம். டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாநில தேர்தல்ஆணையர் வி பாஸ்கரன் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம்கலந்துரையாடல் நடத்தினார்.பின்னர் அவர் தலைமைச் செயலாளருடனும் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் திங்களன்று காவல்துறைத் தலைவருடனான சந்திப்பில்தெரிவித்தார்.இருப்பினும்,தற்போதைய சூழ்நிலையில்,அனைத்து 14 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் நடைமுறை சிரமம் உள்ளது.இது குறித்து ஆராய்ந்து தெரிவிக்கப்படும் என்று டிஜிபி லோக்நாத் பெஹ்ரா கூறினார். 

ஏழு மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு கட்டங்களாக வாக்களிப்பு நடைபெற வாய்ப்புள்ளது. கடந்தநான்கு உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. வாக்களிக்கும் இயந்திரங்களை ஆய்வு செய்ய வந்த பல அதிகாரிகள், கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளானது கால அட்டவணையை அறிவிப்பதற்கு சவாலாக அமைந்தது. எனினும் உரிய நேரத்்தில் ஆய்வு முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.மற்ற அனைத்து தயாரிப்புகளும் ஆணையத்தால் முடிக்கப்பட்டன.துணை வாக்காளர் பட்டியல் நவம்பர்10 க்குள் வெளியிடப்படும்.பிரச்சார வழிகாட்டுதல்கள் மற்றும் கோவிட் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.அதிகாரிகளின் பயிற்சியும் நிறைவடைந்துள்ளது.தேர்தலை நடத்த சுமார் இரண்டு லட்சம் அதிகாரிகள் தேவைப்படுவார்கள்.