tamilnadu

img

தொடர் போராட்டம்:  மருத்துவர்கள் அறிவிப்பு

 கும்பகோணம், ஜூலை 12- கும்பகோணத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பட்டப் மேற்படிப்பு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டாக்டர் ராஜேஷ்ராம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க செயலாளர் விஸ்வேஸ்வரன், மருத்துவர்கள் மோகன், சரத்சந்திரன், தருண், அருட்செல்வன் உள்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கிட வேண்டும். எம்சிஐ விதிப்படி மட்டுமே அல்லாமல், நோயாளிகள் சேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணி இடங்களை அரசாணை 4 டி.2 வில் உள்ளதை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் வரும் 15,16-ம் தேதியில் சென்னையில் தொடர் உண்ணாவிரதம், 18-ந் தேதி  தமிழகமெங்கும் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என மாவட்ட செயலாளர் ராஜேஷ்ராம் தெரிவித்துள்ளார்.