வீராங்கனை தேர்வில் முற்றும் மோதல்
மகளிருக்கான உலகக்கோப்பை குத்துச்சண்டை தொடர் ரஷ்யாவில் அக்டோபர் 3 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம் (51 கிலோ), லவ்லினா (69 கிலோ) ஆகியோர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர்.தகுதி சுற்றுப் போட்டி நடத்தாமல் வீராங்கனை தேர்வு நடைபெற்றதால் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிகாத் ஜரீன் கடிதத்துடன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தோனேசியா, இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டிகளில் நிகாத் ஜரீனை மேரிகோம் பலமுறை வீழ்த்தியுள்ளார். இதனால் தான் நிகாத் ஜரீனை நீக்கியுள்ளோம் எனத் தேர்வுக் குழு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால் விதிகளைச் சுட்டிக்காட்டி நிகாத் ஜரீன் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால் இந்த பிரச்சனை மேலும் முற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.