குஜராத் ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
குஜராத்தின் பாருச் மாவட்டத்தில் தஹேஜில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தது, சம்பவ இடத்தில் 10 தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டு தீயணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ரசாயன தொழிற்சாலையை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.