மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தன்னை நாட்டின் சவுக்கிதார் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜகவினர் பலரும் தங்களது பெயர்களுடன் சவுகிதார் என்று அடைமொழியும் வைத்துக் கொண்டனர். ஆனால் சவுகிதார் மோடியே ஜனா கிருஷ்ணமூர்த்தியின் ஆமதாபாத் நிலத்தை அபகரித்து இருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு மோடி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் காந்திநகரில் 411 எண்ணில் உள்ள நிலத்தை தனக்கு சொந்தமான நிலம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 401ஏ எண்ணில் உள்ள நிலமும் தனக்கு சொந்தம் என்று தெரிவித்துள்ளார். அதில் 411 நிலம் குறித்து தகவல் தெரிவிக்க வில்லை. என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டி உள்ளார்.இதற்கு விளக்கம் அளித்த பாஜக இரண்டு நிலங்களும் இணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நிலங்களை விற்கவோ அல்லது உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றவோ முடியாது என்பது தெரியவந்துள்ளது. வேறு நபர்களுக்கு மாற்ற இயலாதபோது அவற்றை எப்படி இணைக்க முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒதுக்கப்பட்ட 4 நிலங்களில் ஒரு நிலத்திற்கு சொந்தக்காரர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி,. அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அவர் இறந்து 7 மாதங்களுக்குப் பின் அந்த நிலம் எப்படி மோடிக்கு சொந்த மான நிலத்துடன் இணைக்க முடியும். ஜனா கிருஷ்ணமூர்த்தி ஒப்புதல் தந்தாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக வழக்கறிஞர் மீனாட்சி லேகி கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு நிலம் எதுவும் ஒதுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மோடி முன்னுக்குப்பின் முரணாக முதலில் கால் பங்கு நிலத்திற்கு சொந்தக்காரர் என்றார் மோடி பின்னர் நிலம் இணைக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறார். இந்நிலையில் நிலத்தை இணைப்பது சட்டவிரோதம் ஆகும். நிலத்தை இணைத்ததற்கான ஆதாரத்தை பாஜக வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் காவல்காரர் என்று தன்னை கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியே தனது முதல்வர் பதவியை அவதூறாக பயன்படுத்தி நிலத்தை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது