tamilnadu

குஜராத்தில் ஜேஇஇ தேர்வை  45 சதவிகித மாணவர்கள்  எழுத வில்லை

குஜராத்தில் ஜேஇஇ தேர்வை 45 சதவிகித மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப்படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதன் படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வு செப்1ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில்  9.53 லட்சம் மாணவ மாணவிகள் எழுத விண்ணப்பித்தனர். இந்நிலையில் நேற்று காலை 9 மதல் 12 மணி வரை இளங்கலை பட்டிடவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு 1,38,409 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதேபோல்  மதியம் 3 முதல் 6 மணி வரை பி.ப்ளானிங் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. இந்தப் படிப்புக்காக 59,003 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்
இந்நிலையில் நேற்று குஜராத் மாநிலத்தில் 13 மாவட்டங்களில் 32 தேர்வு மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்வை எழுத 38,167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே, முதல் நாள் தேர்வுக்கு 3,020 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 1664 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 1356 பேர் தேர்வு எழுத வரவில்லை என ஜேஇஇ தேர்வு ஒருங்கிணைப்பாளர் வீரேந்திர ராவத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.