குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பள்ளியில் மாணவரை ஆசிரியர் அடித்ததைக் கண்டித்ததால், மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியரை வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள ஆஷாதீப் பள்ளியில், கடந்த செவ்வாயன்று பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மாணவரை அடித்துள்ளார். இதை அடுத்து, மறுநாள் புதனன்று மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இதில், முதல் சிசிடிவி பதிவில் ஆசிரியர் மாணவரை அடித்து உதைத்து குத்தும் காட்சியும், இரண்டாவது காணொலிப் பதிவில் வகுப்பறையில் நுழைந்த மாணவரின் தந்தை மற்றும் சிலர் ஆசிரியரை அடித்து உதைத்து வகுப்பறையிலிருந்து தரதரவென இழுத்து வரும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கு வெளியே இழுத்து வந்து தடி உள்ளிட்டவற்றால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஆசிரியர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.