tamilnadu

img

தலித்துக்கள் - முஸ்லிம்களுக்கு சொத்து விற்கக் கூடாதாம்...!

அகமதாபாத்:
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொத்துக்களை விற்கக் கூடாது என்று துண்டறிக்கை வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராம் மாநிலம், நர்மதா மாவட்டம், நண்டோட் தாலுகாவுக்கு உட்பட்ட வாடியா கிராமத்தில் காலனி ஒன்று உள்ளது. இந்த காலனியின் நிர்வாகமானது, தங்களது காலனியில் குடியிருப்போருக்கு அறிவுறுத்தல் என்ற பெயரில் துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காலனியின் சொத்துக்களை, தலித்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல வேறுபல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், வாடியா காலனி நிர்வாகம் வெளியிட்ட துண்டறிக்கை வெளியில் பரவியதுடன், சமூகவலைத் தளங்களிலும் வெளியானது. இதனால் ஆவேசமடைந்த தலித் மக்கள், இது அப்பட்டமான தீண்டாமை மற்றும் சாதியப் பாகுபாடு என்று குற்றம் சாட்டியதுடன், வாடியா காலனி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியரிடமும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

;