குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவரங்கபுரா தனியார் மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சை பகுதியில் வியாழனன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தி 8 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.