சூரத் நகரில் உள்ள தையல் பயிற்சி பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
இன்று மாலை குஜராத் மாநிலம் சூரத் நகரின் சரத்னா பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் 4வது மாடியில் இயங்கி வந்த தையல் பயிற்சி பள்ளி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 15 மாணவர்கள் இறந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. மேலும், மாணவர்கள் சிலர் தீ விபத்திலிருந்து தப்பிக்க கட்டிடத்தின் மாடி பகுதியிலிருந்து கீழே குதிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் மீதிருந்து குதித்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ அணைக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் பணமும் நிவாரணமாக அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.