tamilnadu

img

ஆபத்தான நிலையில் காட்டாற்றுப் பாலம்

தஞ்சாவூர், நவ.12- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி பூனைக்குத்திஆறு பாலத் தின் தடுப்பு வேலிகள் பெயர்ந்து ஒரு மாத காலமாகியும் சீர் செய்யப்படா மல் உயிர்களை பலி வாங்க உள்ளது. இதனை சரி செய்ய வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் முக்கிய சாலையில் பூனைக்குத்தி ஆறு என்ற காட்டாறு செல்கிறது.  அதிகப் படியான மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது இந்த காட்டாறு மூலமாக தண்ணீர் கட லின் முகத்துவாரத்திற்கு செல்கி றது. மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது இந்தப் பாலத்தை தொட்டுச் செல்லும் அளவிற்கு உயரம் குறைவாக உள்ளது.  இதே போல் பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல் லும் சாலையில் பூக்கொல்லை அரு காமையில் ஒரு காட்டாற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. மேலும் அறந்தாங்கி செல்லும் சாலையிலும் தரைப்பாலத்தின் வழியாகவே  காட்டாறு செல்கிறது. பேராவூரணி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த மூன்று பாலத்தையும் உயர்மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக் கை வைக்கப்பட்டுள்ளது. இதற் காக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இருந்த போதிலும் தற்போது இந்தப் பாலங்களில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் அவ்வப் போது சில சில விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது, இதனை தடுக்கும் வகையிலும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் கடந்த ஆண்டு இந்தப் பாலத்தின் பக்கவாட்டில்  காங்கிரீட் கலவை கொண்டு தடுப்பு சுவர் போல இரும்புத் தகடுகளை பக்கவாட்டில் அமைத்திருந்தனர். பேராவூரணியில் இருந்து பட்டுக் கோட்டை செல்லும் வழியில் இந்த பூனைக்குத்தி ஆறு வழியாகத்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் கல்லூரி விடுதியும், அரசு கால் நடை மருத்துவமனையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், இ-சேவை மையமும், பல பெட்ரோல் பங்குகளும், முக்கி யமாக 3 மதுபான கடைகளும் இயங்கி வருவதால் இந்த சாலை எந்த நேரமும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படும்.  எனவே இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் அமைத்தி ருந்த இரும்பு  தடுப்பு வேலி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறிய ரக கார் விபத்துக்குள்ளானதில் இந்த இரும்பு தடுப்பு வேலியில் மோதி பாலத்திற்குள் விழுந்து எந்தவித  உயிரிழப்புமின்றி அவர்களை மீட்டனர். அதன் பிறகு இந்த தடுப்பு வேலியை சரி செய்யாமல் விட்டு விட்டதால் ஆபத்தான நிலையில் பல உயிர்களை பலி வாங்கும் நிலையில் உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதி காரிகள் உடனடியாக இரும்பு தடுப்பு வேலியை சரிசெய்து பொது மக்கள் எவ்வித அச்சமும் இல் லாமல் பாதுகாப்பான முறையில்  இந்த பாலத்தை கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொ துமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கையாக விடுக்கின்றனர்.