tamilnadu

img

இளம்பிள்ளை அருகே குளம் போல் காட்சியளிக்கும் சாலை

இளம்பிள்ளை, நவ. 11- இளம்பிள்ளையை அடுத்த அரியானூர் அருகே சாலையெங்கும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும் நிலையில், வாகனஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அரியானூர் பகுதியில் சேலம்- சங்ககிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் கொம்பாடிபட்டி பிரிவு அமைந்துள் ளது. இங்கிருந்து கடதுர் பிரிவு சாலை வரை அரை கிலோ மீட்டர் தூரம் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக விசைத் தறி நெசவாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என நாள்தோறும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் இளம்பிள்ளைக்கு  சென்று வருகின்றனர். இந்நிலையில் தற் போது பெய்து வரும் தொடர் மழையால் இந்த சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து குட்டை போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால், இவ்வழியே வரும் வாகன ஓட்டி கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின் றனர்.  மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்ப வங்களும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்த சாலையை கடக்க அஞ்சி வாகன ஓட்டிகள் சிலர் தேசிய நெடுஞ் சாலையில் அபாயத்தை உணராமல் பய ணிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகள் கூட ஏற்படுகிறது. அதேபோல், ஒரு வழி பாதையில் விதியை மீறி  வந்ததாக கூறி காவல் துறையினரும் அபராதம் விதித்து  வருகின்றனர். ஆகவே, குண்டும், குழியுமாக மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும் சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டு மென அப்பகுதியினர் கோரிக்கை விடுக் கின்றனர்.