வெள்ளளூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையீடு
கோவை, மார்ச் 11– வெள்ளளூர் பேரூராட்சிக்குட் பட்ட இராமசாமி கோனார் நகர் குடி யிருப்பு பகுதிக்கு கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரக்கோரி பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையீடு செய்தனர். கோவை சிங்காநல்லூர் அடுத்த நகரத்தையொட்டிய பகுதியாக இருப் பது வெள்ளளூர் பேருராட்சி. இப்பகுதி யில் இராமசாமி கோனார் நகர் உள் ளது. இங்கு நூற்றுக்கும் அதிகமான குடி யிருப்புகள் மற்றும் சிறுவர் பள்ளியும் உள்ளது. இப்பகுதி உருவாகி சுமார் 30 வருடங்கள் ஆகிறது. இருப்பினும் அடிப்படை வசதியான கழிவுநீர், வடி கால் வசதி இதுவரை செய்து தரப்பட வில்லை. இதன்காரணமாக குடியி ருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்தவெளியில் விடப்படு கிறது. இதனால், கொசு உற்பத்தி அதி கமாகி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரப்பட வேண்டும் என இப்ப குதி மக்கள் தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையீட்டும் இது வரை எவ்வித அசைவும் இல்லாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், வெள்ளளூர் பகுதி யில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்கிற அரசின் அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத னால், இப்பகுதியில் அனைத்து வசதிக ளும் கிடைக்கும் என பரப்பப்பட்டது. நிலத்தின் மதிப்பும் வெள்ளளூர் பகு தியில் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், 30 ஆண்டுகள் வசிக்கும் இக்கு டியிருப்பு பகுதிகளுக்கு சாதாரண அடிப்படை வசதியான சாக்கடை கால் வாய் வசதி கூட வெள்ளளூர் பேரூ ராட்சி செய்து தரப்படாமல் இருப்பது இப்பகுதி மக்களுக்கு வேதனைக்குள் ளாகியுள்ளது. இந்நிலையில் புதனன்று மீண்டும் இப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளளூர் பேரூ ராட்சி அதிகாரிகளை சந்தித்து கழிவு நீர் வடிகால் வசதி கேட்டு மனு அளித்த னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், இராம சாமி கோணார் நகர் குடியிருப்பு பகு திக்கு உடனடியாக கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரப்பட வேண்டும் என தற்போதும் அதிகாரிகளிடம் வலியு றுத்தியுள்ளோம். இனியும் அதிகாரி கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால் அரசின் கவனத்தை ஈர்க்க மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடு படும் நிலை உருவாகும் என்றார்.