கிருஷ்ணகிரி, பிப். 26- கிருஷ்ணகிரி குருபரப்பபள்ளி பகுதியில் வெளிநாட்டு டெல்டா பெரு நிறுவனத்திற்காக விவசாயிகள் விளை நிலம் 250 ஏக்கரை கைய கப்படுத்திட அரசும், சிப்காட் நிறுவனமும் முயற்சிப்பதைக் கண்டித்து டெல்டா நிறு வனம் அருகில் ஊர் மக்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. வேப்பணப் பள்ளி ஊராட்சி ஒன்றி யத்திற்குப்பட்ட குருபரப்பள்ளி பகுதி சிப்காட் டில் வெளிநாட்டு டெல்டா நிறுவனம் துவங் கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவ னத்திற்கு இன்னும் கூடுதல் நிலம் தேவைப் படுவதாகக் கூறி அரசு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்கியுள்ளனர். ஏ.குருபரப்பள்ளி, வினாயகபுரம், பி.குரு பரப்பள்ளி, மணியாண்டப்பள்ளி, கக்கன் புரம், எண்ணேகொள், போடரப்பள்ளி, புளி யஞ்சேரி கிராம 10 சர்வே எண்களில் 250 ஏக்கருக்கும் மேல் விவசாய விளை நிலம் கையகப்படுத்த உள்ளதாக சம்மந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மா, கொய்யா, வாழை, பலா, மாதுலை, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களும்,, நெல், ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்களும் கடந்த 150 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாய நிலங் களை கையகப்படுத்தக் கூடாது என குரு பரப்பள்ளி பகுதி விவசாயிகள், பொது மக்கள் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாநிலை நடைபெற்றது.