tamilnadu

img

மாணவர் சேர்க்கை முகாம்

கிருஷ்ணகிரி, ஜூன் 5-தேன்கனிக்கோட்டை வட்டம் மலை உச்சியில் உள்ள பெட்ட முகிலாலம் ஊராட்சி கோட்டையூர் பள்ளியை சுற்றியுளள கிராமங்களில் தீவிர மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஓசூரிலிருந்து இயங்கும் ‘வித் யூ’ அறக்கட்டளை சார் பில் 8வது மற்றும் இறுதி கட்டமாக தீவிர மாணவர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. புதிய மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்பு, நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கி, மேள,தாளங்கள் இசைத்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.மாணவர்கள் சேர்க்கை, மற்றும் பள்ளியின் முன் னேற்றத்திற்கு தொடர்ந்து உதவி வரும் வித்யூ அறக் கட்டளையின்  கிருஷ்ணமூர்த்தி, இளயராஜா உள் ளிட்ட நிர்வாகிகளை பள்ளி முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்கள், ஊர் பொது மக்கள், வனத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் முகாமில் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.