இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 31ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் ஓசூர் மிடுகரப்பள்ளியில் நடைபெற்றது. பகத்சிங் நினவு ஜோதி ஓட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சேதுமாதவன் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் கனகராஜ், மாவட் டச் செயலாளர் சுரேஷ், தலைவர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவி, நாராயணசாமி, பிஜி.மூர்த்தி, வாசுதேவன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.