கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் மகளிர் சுய உதவிக் குழுவினர் குடும்ப மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில், பெற்றோரை இழந்த மாணவருக்கு ரூ.10,000, பெற்றோர்களில் ஒருவரை இழந்த மாணவருக்கு ரூ. 6,000 என 161 பேருக்கு ஐவிடிபி நிறுவனர் ராமன் மகசேசே, விருதாளர் குழந்தை பிரான்சீஸ் ஆகியோர் உதவித் தொகை யை வழங்கினர்.