tamilnadu

img

கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி மாணவரின் சாதனை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கைகளையும் இழந்த அரசுப் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த 2 கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.