சென்னை, ஜூன் 12 - குடிசைமாற்று வாரிய குடியிருப்பை பயனாளிகளுக்கு வழங்கக் கோரி வெள்ளி யன்று (ஜூன் 12) அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கே.பி.பார்க்கில் இருந்த பழுதடைந்த குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடி யிருப்பு இடிக்கப்பட்டு, புதிதாக 864 குடி யிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. குடியிருப்பு இடிக்கப்பட்ட நேரத்தில், அங்கிருந்த மக்க ளுக்கு அருகில் உள்ள மைதானத்தில் 100சதுர அடி பரப்பில் தற்காலிக தகர கொட்டகை அமைத்து குடியமர்த்தப்பட்டனர். குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட நிலை யில், பயனீட்டாளர்களுக்கு அரசு வீட்டை வழங்கவில்லை. மாறாக, அந்த குடியிருப்பு முழுவதையும் கொரோனா தனிமைப்ப டுத்தும் சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது. இதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இந்நிலையில் கடந்த 4ந் தேதி அந்த பகுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அரசின் முடிவை கண்டித்து ஜூன் 12 அன்று மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து ஜூன் 11 அன்று காவல்துறை, குடிசைமாற்று வாரிய அதிகாரி கள் அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்து பேசினர். கொரோனா தொற்று வேக மாக பரவி வரும்நிலையில் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். உயர் அதிகாரிகளை சந்திக்கவும் ஏற்பாடு செய்வ தாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அந்தப்பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். எழும்பூர் பகுதிச் செய லாளர் கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர் நாகராணி, கிளைச்செயலாளர்கள் அன்பு, சரவணன், சிந்துஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.