கிருஷ்ணகிரி, ஜூன் 22- கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன், வட்டித் தொகையை வசூலிக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங் கரை அருகில் குன்னத்தூர் ஊராட்சியில் கடன், வட்டி வசூல் செய்வதற்காக குழு கூட்டத்தை கட்டாயப்படுத்தி கூட்டி வசூல் செய்யப்படுகிறது. கடந்த வாரம் காரப்பட்டு அருகில் மகளிர் சுய உதவிக் குழு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் குழு கூட்டத்தை கூட்டினால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டத்தை கட்டாயப்படுத்தி கூட்டக் கூடாது என்றும், தவணைத் தொகை மற்றும் வட்டியை குறைந்த பட்சம் 6 மாதம் வசூலிக்க அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.