கிருஷ்ணகிரி, ஜூலை 5- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தில்லை நகரில் வசிப்பவர் கோபிநாத். இவரது மனைவி சிரிசா. இவர்களது மகள் நிகாரிகா. இவர் பெங்களூரு ஆக்ரிட்ஜ் சர்வதேசப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் சிறுவயதிலிருந்தே கல்வி, பரதம், ஓவியம் விளையாட்டு என அனைத்திலும் பயிற்சி பெற்றுள்ளார். கலை, சமூக பொருளா தார பாடங்கள் மீதும் ஆர்வம் கொண்டவர். கொரியன் பாப் குரூப் ஜே ஹோப் சோலோ ஆல்பம் மூலமே சமூகத் தொண்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது என்றும், தன் ஓவியங்கள், கைவினை பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை, எளிய மக்க ளுக்கு வழங்கி உதவி செய்வதாகவும் தெரி வித்தார். ஓசூர் அபாலா இல்லத்தின் மனவளர்ச்சி குன்றிய 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மனோரீதியாக உற்சாகம் ஏற்படுத்தி, ஓவி யம், எளிய முறையில் கைவினைப் பொருட் கள் தயாரிக்க, தையல் பயிற்சி அளித்து, அதன் மூலம் குறைந்தபட்ச வருவாய் பெருவ தற்கு வழிவகை செய்துள்ளார்.
மலை வாழ் மக்கள் வசிக்கும் தேன் கனிக்கோட்டை வட்டம் மலை கிராமமான தொட்ட மஞ்சியில் வசிக்கும் 125க்கும் மேற் பட்ட இளம் பெண்களுக்கு கைவினை பொருட்கள், தையல் தொழில், துணிப்பை, பேப்பர் பை தயாரிக்க பயிற்சியளித்து வருகி றார். அத்துடன் டைட்டன், அசோக் லேலண்டு, டிவிஎஸ், கேட்டர் பில்லர், வெண்ட் இந்தியா நிறுவனங்ககள் உதவியுடன் தொட்ட மஞ்சி கிராமத்திலும், ஓசூர் அபாலா இல்லத்தி லும் நிரந்தர வருவாய்க்கான சுய தொழில் நிறுவனங்களை அமைத்துக் கொடுப்ப தற்காக “ஹோப் வேல்டு்” செயல் திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்தச் செயல் திட்டம் குறித்து, விவ ரிக்க ஐ.நா. சபை இவருக்கு அழைப்பு விடுத்தி ருந்தது. அதனடிப்படையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஐ.நா. சபையில் தன் தொட்ட மஞ்சி, ஓசூர் அபாலா மனவளர்ச்சி குன்றி யோர் இல்ல திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். அதனை தொடர்ந்து இளவரசி டயா னாவின் பிறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி நிகாரிகாவுக்கு “டயானா “ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதன் மூலம் நிகாரிகா தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதுகுறித்து நிகாரிகா கூறுகையில், ஏழை, எளிய மலைவாழ் மக்களுக்கும், பின் தங்கிய மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மான என் சமூகப் பணிகளை மேலும் முன்னெ டுக்கவும், நான் உருவாக்கியுள்ள”ஹோப் வேல்டு” திட்டத்தை முழுவீச்சில் செயல்ப டுத்துவதற்கான உந்து சக்தியாகவே இந்த விருதை கருதுகிறேன் என்றார். நிகாரிகா சர்வதேச அளவிலான நடனப் போட்டியில் 5 முறை தங்கப்பதக்கம் வென் றுள்ளார். ஏழை எளிய மக்கள் நல திட்ட உதவிக்கான நிதி சேகரிப்பிற்கு பல மாநிலங்க ளுக்கு சென்று நடன நிகழ்ச்சிகளில் பங்கேற் றுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்க ளில் பரதநாட்டியத்தின் மூலம் பரதகலா மணி, இந்திய இளம் நட்சத்திம் என பல பட்டங்கள், விருதுகளும், ஓவியம் வரைவதிலும் இந்திய அளவில் 2ஆம் பரிசு பெற்றுள்ளார். இளம் வயதிலேயே விருது பெற்ற மாணவி நிகரிகாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி சால்வை அணிவித்து, புத்தகங் களை பரிசாக வழங்கி பாராட்டினார்.