கிருஷ்ணகிரி, அக்.22- மாநகராட்சியாக ஓசூர் நகராட்சி தரம் உயர்த்தப் பட்டு மூன்று ஆண்டுகளை யும் தாண்டி ஊரெல்லாம் குப்பையே மாநகராக காட்சி யளிக்கிறது. மூக்கண்டப்பள்ளி 15,16 வது வார்டுகளில் பொதிகை நகர், சிவாஜி நகர், மாணிக்க வாசகர் நகர், ராஜாஜி நகர், சிவன் கோவில் தெரு, ஈஸ்வர் நகர், எம்ஜிஆர் நகர் ரேசன் கடை, நேதாஜி நகர் மேற்கு விளையாட்டு மைதா னம், கோபால்சாமி கோயில் தெருவிலும், அரசு பள்ளிக் கூடம் முன்பும் மாநகராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டி சேமித்து பிறகு எடுத் துச் செல்கின்றனர். சில நேரங் களில் 10 நாட்கள் வரை குப்பை அள்ளுவதில்லை. நகராட்சியுடன் இணைக் கப்பட்டு 9 ஆண்டுகளாகியும், மாநகராட்சியாக அறிவிக்கப் பட்டு 3 ஆண்டுகளை கடந் தும் சாலை, மின் விளக்கு, கழிவு நீர் கால்வாய் என எது வும் புதிதாக அமைக்கப்பட வில்லை. ஏற்கனவே உள்ள மின் விளக்கும் பெரும்பா லான பகுதிகளில் பராமரிப்பு இல்லை. சமமாக இருந்த தெருக்கள், சாலைகள் குண்டும், குழியுமாக நடந்து செல்லக் கூட தகுதியற்ற தாக காட்சியளிக்கிறது. ஊராட்சியாக இருந்த போது போடப்பட்ட பழைய கழிவு நீர்க் கால்வாய் அனைத்தும் பாழடைந்து உள்ளதால் நேதாஜி நகர், அன்னை சத்யா நகரில் மழைக் காலங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தெருக்களில் குட்டை போல் தேங்கி நிற்கி றது. ஊராட்சியாய் இருந்து இணைக்கப்பட்டு நகராட்சி, மாநகராட்சி என மாறி, மிகப் பெரும் குடியிருப்பு பகுதிக ளாக மாறியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 300 சதவீதம் வீட்டு வரி உயர்வு ஏற்றப்பட் டுள்ளது. ஆனால், அதற் கான எந்த தகுதியும் பெற வில்லை. குப்பை குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும், சாலை, தெருக் கள், மின் விளக்கு, கழிவு நீர் கால்வாய்களை சீர்ப டுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முக்கண்டப்பள்ளி பகுதி நிர்வாகிகள் மாநகராட்சி நிர் வாகத்தை வலியுறுத்யுறுத்தி யுள்ளனர்.