கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் ஊரக வளர்ச்சி தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் ரூ. 50 லட்சம் மற்றும், ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.1 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக பணிகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர், காவல்துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் சகுந்தலா ஆகியோர் பங்கேற்றனர்.