கிருஷ்ணகிரி,அக்.24- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூள கிரி வட்டம் மலைகளால் சூழப்பட்ட தாகும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நாகமலை, சிகரலப்பள்ளி கேட், சின்னகுத்தி, பெரிய குத்தி, கும்ப ளம், தம்னகுண்டலப்பள்ளி, தச்சன திருப்பதி, சானமாவு, பன்னல் நத்தம், உத்தனப்பள்ளி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை அர சாங்கமே குடியமர்த்தியது. தற்போது குடும்பத்தின் எண்ணிக்கை 400யை எட்டிவிட்டது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இங்கு வசிக்கும் அனைவருக்கும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு 50 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அரசே குடி யமர்த்தி இதுவரை குடிசைகளில் வசித்து வரும் 90 சதம் குடும்பங்க ளுக்கு பட்டா இல்லை. இந்த வீடுகள் அனைத்தும் மேற் கூரைகள் இடிந்து கம்பிகள் தொங்கு கிறது. கதவுகள் பெயர்ந்தும், மின் இணைப்புகள் பழுதாகி துண் டிக்கப்பட்டும் உள்ளது. மொத்தத்தில் எப்போது வேண்டுமானலும் மொத்த சுவர்களும் இடிந்து விழ தயாராக குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. இதே காட்சியில் உத்தணப் பள்ளியில் 8 தொகுப்பு வீடுகளும் உள்ளதாலும் ஒரு சிறு வீட்டுக்குள் ளேயே ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் கூட்டுக் குடும்பமாக 8 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்க இயலாததாலும் அருகில் குடிசை கள் போட்டு அதில் வசிக்கின்றனர். அந்த மக்கள் வசிக்கும் பகுதி யில் மின் விளக்கு, குடிநீர், சுகாதார வசதிகள் இல்லை. 75 விழுக்காடு மக்க ளுக்கு சாதிச் சான்று கொடுக்க அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அருகாமை பள்ளிகள் கிடையாது. நகர பேருந்து வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. சுமார் 500 குழந்தைகளின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. குடி நீருக்குக்கூட வழி இல்லாமல் ஆங் காங்கு குட்டைகளிலும், பெரியகுழி கள் தோண்டி அதில் ஊறும் நீரையும் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மலை வாழ் மக்கள் வசிக்கும் வீடுகளை யும் ஊர்களையும், விவசாய நிலங் களையும் விட்டும் வெளியேற்ற தொடர்ந்து சூழ்ச்சிகள் நடந்து வரு கிறது. இதன் இன்னொரு முகமாக அரசு அதிகாரிகளும், வன அலுவ லர்களும் ஆடு மாடுகள் மேய்ப்ப வர்கள், காய்ந்த விறகு திரட்டு வோர் மீது உண்மைக்கு மாறாக பொய் வழக்குகள் போட்டு மிரட்டி லஞ்சமாக ரூ. 2000 முதல் 10000 வரை பல தவணைகளாக வசூலிக்கப்படு கிறது. இந்நிலையில் சூளகிரி வட்டம் ராமன் தொட்டியில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க வட்ட முதல் மாநாடு நடைபெற்றது. விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முனியப்பா தலைமை தாங்கினார். தலைவர் எம்எஎம்.ராஜூ முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் திராடி முனிசாமி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் துவக்கி வைத்தார். அகில இந்திய ஆதிவாசிகளுக்கான தேசிய மேடை யின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 2006 வன உரிமை சட்டப்படி மலை மக்கள் குடியிருந்து வரும் வீடு களுக்கும் விவசாய நிலங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், குடிநீர், மின்விளக்கு, சாலை சுகாதார வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். சாதிச் சான்று இல்லாமல் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இம் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றினர்.
நிர்வாகிகள்
தலைவர் சின்னப்பா, செயலாளர் ராஜப்பா, பொருளாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாபாளர் திராடி முனிசாமி உட்பட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.