பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் 29 வயதான உமர் அக்மல், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபடத் தன்னை அணுகிய நபர் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் மறைத்தது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.