கர்நாடக பிரிமியர் லீக்கில் சூதாட்டம்
தமிழகத்தில் டிஎன்பிஎல் டி-20 தொடரைப் போல அண்டை மாநிலமான கர்நாட காவில் கேபிஎல் (கர்நாடகா பிரி மியர் லீக்) என்ற பெயரில் டி-20 தொடர் நடைபெற்று வரு கிறது. இந்த தொடரில் முக்கிய அணியாக வலம்வரும் பெலகாவி பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அலி அப்சக் தாரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விசாரணைக்குப் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கர்நாடக காவல்துறை ஆயத்த மாகியுள்ளது. டிஎன்பிஎல் தொட ரிலும் சூதாட்டம் நடந்துள்ளதாக ஏற்கெனவே புகார் கடிதம் பிசிசிஐ-க்கு அளிக்கப்பட்டா லும் அதற்கான ஆதாரம் இல்லாமல் தமிழக காவல்துறையினர் திணறி வருகின்றனர்.