tamilnadu

img

நடுவரைக் கையெடுத்துக் கும்பிட்ட கோலி

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை துரத்திய பொழுது நடுவரால் இந்திய அணிக்கு பல்வேறு சங்கடங்கள் உருவாகின. முகமது ஷமி வீசிய 3-வது ஓவரின் 4-வது பந்தை ஆப்கானிஸ்தான் வீரர் ஹஷ்ரத்துல்லா ஜஜாய் எதிர்கொண்டார். பந்து ஜஜாயின் லெக் பேடில் பட்டதால் முகமது ஷமி எல்.பி.டபிள்யு முறையில் அவுட் கேட்டார். நடுவர் மறுக்கவே இந்திய கேப்டன் கோலி டி.ஆர்.எஸ்., முறையில் மூன்றாம் நடுவ ருக்கு அப்பில் செய்தார். பந்தின் பிட்ச்  மையத்தில் மாற்றம் இருக்கவே மூன்றாம் நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார்.  உடனே கோபமடைந்த இந்திய அணியின் கேப்டன் கோலி, “இனி எங்களுக்கு ரிவியூ இல்லை அதனால் தயவு செய்து முடிவுகளைக் கவனமாக வழங்குங்கள்” என கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டார்.
அபராதம்
நடுவரைக் கும்பிடுவதற்கு முன்பு கோலி வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் கத்தினார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது. விராட் கோலியும் தனது தவற்றை ஒப்புக் கொள்ளப் போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம்விதிப்பதாக ஐசிசி நடுவர் அறிவித்துள்ளார்.