tamilnadu

img

டிஎன்பிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடக்கம்

டிஎன்பிஎல் தொடரின் 4-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல், சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 4 அணிகள் (புள்ளிப்பட்டி யல் வரிசைப்படி) பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.   இந்நிலையில் முதல் இரண்டு இடங்க ளைப் பிடித்த திண்டுக்கல் - சென்னை அணி கள் மோதும் “குவாலிபையர் - 1” ஆட்டம் திருநெல்வேலி சங்கர் மைதானத்தில் ஞாயிறன்று பிற்பகல் மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். தோல்வி அடை யும் அணி “குவாலிபையர் - 2” ஆட்டத்தில் விளையாடும். ஞாயிறு இரவு 7.15 மணிக்கு நடைபெறும் (திருநெல்வேலி சங்கர்) எலிமினேட்டர் ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த மதுரை அணியும், நான்காம் இடத்தை பிடித்த காஞ்சி புரம் அணியும் பலப்பரீட்சை நடத்து கின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி  “குவாலிபையர் - 1” ஆட்டத்தில் தோற்ற அணியுடன் மோத வேண்டும். இந்த ஆட்டம் “குவாலிபையர் - 2” என்ற பெயரில் நடைபெறும். “குவாலிபையர் - 2” ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.  இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) நடைபெறுகிறது.